search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூரில்  தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு-வாலிபர் கைது
    X

    ஆத்தூரில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு-வாலிபர் கைது

    • குமரன் என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.
    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தொழிலாளி மகாலிங்க காந்தி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு இருந்து வருகிறது.

    இந்நிலையில் மகாலிங்ககாந்தி, ஈஸ்வரி ஆகியோர் ஆத்தூர்- புன்னக்காயல் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரேவதியின் உறவினரான குமரன் (வயது39) என்பவர் வழிமறித்து அவதூறாகப் பேசி மகாலிங்க காந்தியை அரிவாளால் வெட்டினார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்

    கூச்சலிட்டதால் குமரன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.காயமடைந்த மகாலிங்க காந்தி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×