என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு கலை கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - கல்லூரி முதல்வர் தகவல்
- தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே உரிய தொகையை செலுத்தி விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
தஞ்சாவூர்:
பேராவூரணி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய கலைப் பிரிவுகளுக்கும், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய அறிவியல் பிரிவுக ளுக்கும் விரைவில்மாணவர் சேர்க்கை நடைபெறவு ள்ளது.
இதற்கான விண்ணப்பம் கல்லூரியில் நேரடியாக வழங்கப்பட மாட்டாது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளங்கள் வழி விண்ணப்பிக்க வேண்டும். www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையத்தில் ஜூலை 7 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி, எஸ்.டி மாணவ ர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். பிற மாணவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். ஆன்லைன் மூலம் மட்டுமே உரிய தொகையை செலுத்த முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் மிக முக்கியம்.
மேற்கொண்டு விண்ணப்பம் பதிய மாண வரின் சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் விவரம்அறிய விரும்புவோர் பேராவூரணி அரசுக் கல்லூரியில் இயங்கும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்