search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலஞ்சி பாரத் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்
    X

    யோகாசனம் செய்த பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.

    இலஞ்சி பாரத் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்

    • துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள இலஞ்சி பாரத் பள்ளியில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. பாரத் கல்விக்குழும சிறப்பு அதிகாரி அரவிந்த் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    துணை முதல்வர் பாலசுந்தர், தலைமையாசிரியை சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூர்வஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ரக்சனா வரவேற்றார். மனிதநேயம் குறித்து தனீஸ் குழுவினர் யோகா மூலம் விளக்கினர். நிவேதிகா, ஜெசிந்தா ஆகியோர் ஆரோக்கிய உணவு முறை பற்றி விளக்கி பேசினர்.

    ஆசிரியை லாவண்யா, தேவி ஆகியோர் சமஸ்கிருத யோகா பாடலுக்கு ஆங்கிலத்தில் விளக்கமளித்தனர். அறிவியல் ஆசிரியை சுமதி, கணித ஆசிரியை முத்துக்குமாரி உள்ளிட்டோர் யோகாசனம் பற்றிப் பேசினர். பாரத் கல்விக் குழும அதிகாரி அரவிந்த் குமாா் சிறப்புரையாற்றினார்.

    ஆகிலா யோகா தின உறுமொழி எடுத்தார். ஆமினா நன்றி கூறினார்.

    பாரத் கல்விக் குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி, இயக்குநர் இராதாபிரியா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    Next Story
    ×