search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

    உலக பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×