search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X

    கோப்புபடம்

    தொழிலாளி தற்கொலை

    • கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். .
    • தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பால்பாண்டி மகன் மணிகண்டன்(வயது 24). அதே பகுதியில் உள்ள சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு அவர் வரவில்லை. உடன் பணிபுரிபவர் வேலைக்கு வராததை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது மணிகண்டன் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது .கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது உள்ளே கூரை விட்டத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த தற்கொலை குறித்து மணிகண்டனின் சகோதரி சௌந்தர்யா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×