search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வழக்கை வாபஸ் வாங்க மறுத்த தொழிலாளிக்கு கத்திக்குத்து
    X

    கோவையில் வழக்கை வாபஸ் வாங்க மறுத்த தொழிலாளிக்கு கத்திக்குத்து

    • மாரிமுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    கோவை,

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது38).கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒண்டிப்புதூரில் வசித்து வருகிறார்.

    இன்று காலை மாரிமுத்து வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள தியேட்டார் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரிமுத்துவின் தோள்பட்டை, முதுகு மற்றும் முகத்தில் குத்தினார்.

    பின்னர் 2 பேரும் அங்கு இருந்து தப்பி ெசன்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியை மாரிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த சிங்கா நல்லூர் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சை பெற்றுவரும் மாரிமுத்துவிடம் விசாரித்தனர்.

    விசாரணையில் மாரிமுத்துவின் மனை–விக்கும், வாடிபட்டியை சேர்ந்த மணிகண்டன் என்ப–வருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இதையறிந்த அவர் மனைவியை கண்டித்தார். இதையடுத்து மாரிமுத்துவின் மனைவி கள்ளக்காதலை கைவிட்டு திருந்தி தனது கணவருடன் வசித்து வந்தார்.

    ஆனால் அவரை மணிகண்டன் தொடர்பு கொண்டு உனது கணவனை பிரிந்து வருமாறு தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர் வர மறுத்து தனது கணவருடன் திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் மனைவியை மணிகண்டன் வெட்டினார். இந்த வழக்கு திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் நடந்து வருகிறது.

    இந்த வழக்கை வாபஸ் பெறும்படி மாரிமுத்துவிடம் மணிகண்டன் கூறி வந்தார். ஆனால் அவர் மறுத்ததால் தனது நண்பர் மகேந்திரன் என்பவருடன் சேர்ந்து மாரிமுத்துவை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மணிகண்டன் மற்றும் மகேந்திரனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×