என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
- மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்த ரவு கொடுத்தார்.
- போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயது நபர். கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 22.01.2022 அன்று கூலித் தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் கூலி வேலைக்காக சென்ற னர். மகன், மகள் மற்றும் அவரது தந்தை ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப் போது தொழிலாளி மகனை வெளியே அனுப்பி மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார், போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தொழி லாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உமாதேவி மங்களமேரி ஆஜர் ஆகி வாதாடினார்.






