search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வெள்ளி பட்டறையில் தொழிலாளி மர்மச் சாவு
    X

    சேலம் வெள்ளி பட்டறையில் தொழிலாளி மர்மச் சாவு

    • இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார்.
    • இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ராமயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர். இவரது மகன் ஹரிஹரன் என்கிற பிரவீன் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மேட்டில் உள்ள தனது மாமா வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஹரிஹரன் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×