search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே தொழிலாளி தற்கொலை
    X

    நாங்குநேரி அருகே தொழிலாளி தற்கொலை

    • அரவிந்த் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • அரவிந்த் ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    களக்காடு:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் வசித்து வந்த போது, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த அருள்தங்கராஜ் மகள் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும் காட்டு மன்னார்கோவிலில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1 ஆண்டுக்கு முன் அரவிந்த் தனது மனைவியின் சொந்த ஊரான ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இதற்கிடையே சம்பவத்தன்று அரவிந்த் தான் வசித்து வந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×