என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
- மகனின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தார் .
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கோவில்பா ளையத்தை அடுத்த காளப்பட்டியை சேர்ந்த வர் கண்ணன் (வயது 46). கூலி தொழிலாளி.
இவரது மனைவி ராஜேஸ்வரி (40). இவர்களுக்கு ஹரிஹரன் (20) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்து வரகிறார். இந்த நிலையில் கண்ணனுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று கண்ணன் அவரது மகன் வங்கி கணக்கில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்து செலவு செய்தார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் ராஜேஸ்வரி அவரை கண்டித்தார்.
இதனை நினைந்து கண்ணன் மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் ஹரிஹரன் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்