search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளியை தாக்கிய  5 பேர் மீது வழக்கு
    X

    களக்காடு அருகே தொழிலாளியை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

    • செல்போன் உடைந்தது குறித்து தட்டிக்கேட்ட தொழிலாளி தாக்கப்பட்டார்.
    • காயமடைந்த தொழிலாளி திரவியராஜ் மருத்துவமனையில் அனுமதி.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மேலமாவடியை சேர்ந்தவர் திரவியராஜ் (வயது 38). தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் கணேசன் (39). 2 பேரும் உறவினர்கள்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரவியராஜ் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த கணேசனுடன், அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது திரவியராஜின் செல்போன் உடைந்தது. சம்பவத்தன்று திரவியராஜ், கணேசன் வீட்டிற்கு சென்று உடைந்த செல்போன் குறித்து கேட்டார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் காயம்அடைந்த திரவியராஜ் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து 2 தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×