என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன எடை மையத்தில் ஊழியரை வெட்டி பணம் கொள்ளை
    X

    வாகன எடை மையத்தில் ஊழியரை வெட்டி பணம் கொள்ளை

    • காக்களூர் பகுதியில் வாகன எடைமேடை உள்ளது.
    • ஆத்திரம் அடைந்த வாலிபர் கத்தியால் பாஸ்கரின் தலையில் வெட்டிவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுவர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகன எடைமேடை உள்ளது. இங்கு திருவேற்காடு அகரம் பகுதி சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணியில் இருந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் திடீரென கத்திமுனையில் பணம் கேட்டு பாஸ்கரை மிரட்டினார். ஆனால் பாஸ்கர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கத்தியால் பாஸ்கரின் தலையில் வெட்டிவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்தார். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் நொறுக்கி தப்பிசென்று விட்டார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×