என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்
    X

    சூலூர் அருகே 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்

    • மீட்டுத்தரக்கோரி கணவர் போலீசில் புகார்
    • 29 வயது வாலிபர் மற்றும் பெண்-2 குழந்தைக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள செல்வலட்சுமி புரத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இளம்பெண் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த 29 வயது வாலிபர் ஒருவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாள டைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்து வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி விட்டார். இதனால் இளம்பெண் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தாார்.

    அவர் இளம்பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து இளம்பெண்ணின் கணவர் சூலூர் போலீசில் மாயமான தனது மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×