search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே ஆட்டோ மோதி பெண் பலி
    X

    நெல்லை அருகே ஆட்டோ மோதி பெண் பலி

    • லதா தனது மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
    • ஆட்டோ மோதியதில் லதா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மனைவி லதா(வயது 42). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

    நேற்று மாலை லதா தனது மாடுகளை மேய்ச்சலுக்காக வயலுக்கு அழைத்து சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். வீட்டுக்கு அருகே மெயின்ரோட்டில் மாட்டை பிடித்துக்கொண்டு வந்தபோது எதிரே வந்த ஆட்டோ திடீரென சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதில் மாடு மிரண்டு நடுச்சாலைக்கு சென்றது. அதனை பிடிக்க லதாவும் நடு ரோட்டுக்கு சென்ற நிலையில், எதிரே வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. அதில் அவர் சாலையோரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். அதே நேரத்தில் மாடு மீது மோதியதில் ஆட்டோவும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரை ந்து சென்று லதா வை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரி சோ தனை க்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×