என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்னல் தாக்கி பெண் பலி
- விவசாய கூலி தொழிலாளர்கள் வயலில் களை எடுத்தல் பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கத்திரிப்புலம் பனையடி குத்தகையில் சரண்ராஜ் என்பவரின் மகன் நாகராஜன் சவுக்கு சாகுபடி செய்து வருகிறார்.
நேற்று மாலை இந்த சவுக்கு வயலில் களை எடுத்தல் பணி நடைபெற்றது. இதில் நாகக்குடையான் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது இடியுடன் மழை பெய்தது.
இதில் மின்னல் தாக்கியதில் நாகக் குடையான் ஜீவாநகர் பகுதியை சேர்ந்த குஞ்சையன் மனைவி கமலா (45), சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் நாகக்குடையான்பகுதியை சேர்ந்த ஆரவல்லி (60), ஜெயலட்சுமி(50), முத்தம்மாள்(50) ஆகிய 3 பேரும் அதிர்ச்சி அடைந்து மயங்கினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த கரியாபட்டினம் போலீசார் வழக்குபதிவு செய்து கமலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கி பெண் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்