search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அருகே விபத்தில் பெண் பலி: கார் மோதி படுகாயமடைந்த தொழிலாளியும் பரிதாப சாவு
    X

    நெல்லை அருகே விபத்தில் பெண் பலி: கார் மோதி படுகாயமடைந்த தொழிலாளியும் பரிதாப சாவு

    • மானூர் அருகே உள்ள கானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசய சாமுவேல் . கட்டிட தொழிலாளி.
    • அதிசயசாமுவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    மானூர் அருகே உள்ள கானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசய சாமுவேல் (வயது 35). கட்டிட தொழிலாளி.

    இவரது மனைவி ஜான்சிராணி (30). இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி வந்தனர். ராமையன்பட்டி போலீஸ் காலனி அருகே வந்த போது பின்னால் வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சிராணி பரிதாபமாக இறந்தார்.

    அதிசயசாமுவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×