search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
    X

    சுரண்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

    • பொருட்கள் வாங்குவதற்காக ஜெயா அப்பகுதியை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
    • ஜெயாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    நெல்லை:

    சேர்ந்தமரம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரித்துரை. இவரது மனைவி ஜெயா (வயது 52). இவர்கள் அங்கு புதிய வீடு கட்டி வருகின்றனர்.

    அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சம்பவத்தன்று ஜெயா அங்குள்ள ஒரு கடைக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×