search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    20 ஆண்டுகள் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படுமா? - நெல்லையில் 1,000 பேர் காத்திருக்கின்றனர்
    X

    20 ஆண்டுகள் பணியாற்றிய போலீசாருக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படுமா? - நெல்லையில் 1,000 பேர் காத்திருக்கின்றனர்

    • தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆட்சியின் போதும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை எட்டியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    நெல்லை:

    தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஒவ்வொரு ஆட்சியின் போதும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் வாக்குறுதி

    அந்த வகையில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்ற அங்கீகாரம் வழங்க உத்தரவிட்டார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஏராளமான தலைமை காவலர்கள் பதவி உயர்வு பெற்றனர். தற்போது வரை அந்த ஆண்டுக்கான அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

    எதிர்பார்ப்பு

    அதில், தமிழக காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை எட்டியவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று நெல்லை மாவட்ட போலீசார் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    இதுகுறித்து நெல்லை மாநகர போலீசார் கூறியதாவது:-

    பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி, காவல் நிலையங்களில் பெண் போலீசாருக்கு தனி ஓய்வு அறை, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு, பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

    1,000 தலைமை காவலர்கள்

    தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது காவல்துறையில் பணியாற்றி 20 ஆண்டுகளை முடித்தவர்களுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் எங்களுக்கு அதிகாரி என்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    அதே நேரத்தில் எங்களுக்கு மாத சம்பளத்திலும் உயர்வு கிடைக்கும். தற்போது மாவட்டம் முழுவதும் 2002-ம் ஆண்டு மற்றும் 2003-ம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த தலைமை காவலர்கள் சுமார் 1,000 பேர் உள்ளனர். தேர்தல் வாக்குறுதி நடைமுறைக்கு வந்தால், எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்

    Next Story
    ×