என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் குட்டியுடன் திரியும் காட்டு யானைகள்
- நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த குஞ்சப்பனை, முள்ளூர், மாமரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழம் விளைச்சல் தொடங்கி உள்ளது.
எனவே அந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியே குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. அப்போது அவை ரோட்டில் செல்லும் வாகனங்களை வழிமறிப்பதும், துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக முள்ளூர் பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான சாலையில், காட்டு யானைகள் குட்டியுடன் கடந்த ஒரு மாதமாக உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டம் நேற்று இரவு குஞ்சப்பனை பழங்குடியினர் விற்பனை அங்காடிக்கு அருகில் உள்ள ரோட்டில் முகாமிட்டு நின்றது.
இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே
அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குஞ்சப்பனையில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்