search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டு யானைகள்
    X

    வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் குடிக்கும் காட்டுயானைகளை படத்தில் காணலாம்.

    உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் குட்டியுடன் வலம் வரும் காட்டு யானைகள்

    • உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.
    • 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன.

    தேன்கனிக்கோட்டை,

    கர்நாடக மாநிலத்திலிருந்து கடந்தாண்டு 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் அருகே தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வலசை வந்தன.

    அவை தனித்தனி குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் சுற்றியதோடு, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தன.

    இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் வனத்துறையினர் தனித்தனிக் குழுக்களாகச் சுற்றிய யானைகள் கூட்டத்தை ஒருங்கிணைத்து ஜவளகிரி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்தனர்.

    இதில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தொடர்ந்து, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம் வனப்பகுதியில் நிரந்தரமாக தங்கிவிட்டன.

    இதையடுத்து, யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை மூலம் வனப்பகுதியில் சூரிய சக்தி தடுப்பு வேலிகள் மற்றும் யானைகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

    இதனால், தற்போது யானைகள் வனத்தைவிட்டு கிராமப் பகுதிகளுக்கு வருவது குறைந்துள்ளது.

    இந்நிலையில், அஞ்செட்டி அருகே உடுபராணி, நூருந்துசாமிமாலை, உரிகம் வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக சுற்றி வந்தன.

    இதில், 3 யானைகள் குட்டியுடன் அஞ்செட்டி அருகே உரிகம் வனப்பகுதி சாலையோரத்தில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பருக வந்தன. இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று குட்டியுடன் சுற்றிய யானைகளை வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

    Next Story
    ×