search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகள்
    X

    குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகள்

    • மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது.
    • வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி குன்னூர் குன்னூர் -மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் மலை ரெயிலை மறித்து நின்ற காட்டு யானைகளால் ½ மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. ரெயில் பாதையில் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் தற்போது மழையில்லாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்த வறட்சி வனப்பகுதியிலும் நிலவி வருகிறது. மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளிலிருந்து வறட்சியின் காரணமாக வன விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி இடம் பெயர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் வனப்பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன. மேலும் இவைகள் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முகாமிட்டு விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மலை ரெயிைல வழிமறித்தது தற்போது குன்னூர் -மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் இந்த யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை 3 யானைகள் மலைரெயில் பாதையில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அருகே நடமாடின. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை ரெயிலை இந்த யானைகள் மறித்தப்படி நின்றன. யானைகள் தண்டவாளத்தில் நின்றதால் மலை ரெயில் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமத்திற்குப்பின் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.

    Next Story
    ×