search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரவலாக சாரல் மழை பெய்தது- நெல்லையில் பிசான பருவ  சாகுபடி பணிகள் தொடங்கின
    X

    பரவலாக சாரல் மழை பெய்தது- நெல்லையில் பிசான பருவ சாகுபடி பணிகள் தொடங்கின

    • நெல்லை மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது.
    • பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லையில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மாநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு சாரல் மழை பெய்தது. பாளையில் 5 மில்லிமீட்டரும், நெல்லையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தாமதம்

    மாவட்டத்தை பொறுத்த வரை ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதேபோல் சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்தது.

    வழக்கமாக அக்டோபர் மாதத்தில் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கிவிடும். விவசாயிகளும் பிசான பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கிவிடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.

    பிசான சாகுபடி

    மேலும் தீபாவளி சமய ங்களில் பெரும்பாலான குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் அளவுக்கு ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும் என்பார்கள். ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

    அதே நேரத்தில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் 85 அடி நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அணையில் வழக்கமாக 60 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு விடும் என்பதால் தற்போது நடவு பணிகளை மேற்கொ ள்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×