என் மலர்
உள்ளூர் செய்திகள்

அணைகளில் இருந்து கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கூடாது- விவசாய சங்கத்தினர் மனு
- கார் சாகுபடிக்காக அணைகளில் இருந்து 4 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அக்டோபர் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை:
பகுஜன் சமாஜ் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மானூர் தாலுகா தென்கலம் காமராஜர் நகர், நல்லம்மாள்புரம், தென்கலம் புதூர், புளியங்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக கிராம மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஆனால் இந்த இடம் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமானது என கூறி அதனை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நெறுக்கடி கொடுக்கிறது. எனவே அங்கு அப்பகுதிபொதுமக்கள் தொடர்ந்து வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
தமிழ்நாடு விவசாய சங்க அம்பை, சேரன்மகாதேவி ஒன்றிய குழு சார்பில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், கார் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து 4 கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் நதியுன்னி கால்வாய், வடக்கு மற்றும் தெற்கு கோடைமேல் அழகியான் கால்வாய், கனடியான் கால்வாய் ஆகியவற்றிக்கு கடந்த 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அக்டோபர் 31-ந் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அரசியல் கட்சி பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதியில் தண்ணீர் இன்றி நடவு செய்த பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே கோடகன் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
மேலப்பாளையம் ஆமீன்பு ரம் மதரசா முத்தவல்லிகள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்த்தின் கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டிந்தது.






