என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பவானிசாகர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்16 Jun 2022 12:25 AM IST
- காலிங்கராயன் வாய்க்கால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
- நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலிங்கராயன் வாய்க்காலிலுள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை 120 நாட்களுக்கு, தண்ணீர் திறந்த விட கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து ஆணையிடப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X