search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்வு
    X

    வைகை அணை (கோப்பு படம்)

    பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர்வு

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 53.81 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் 54.17 அடியாக உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவடட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாக உள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்வரத்தை பொறுத்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதால் 53.81 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் 54.17 அடியாக உயர்ந்துள்ளது.

    அணைக்கு 730 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2586 மி.கனஅடியாக உள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.75 அடியாக உள்ளது. அணைக்கு 165 கனஅடிநீர் வருகிறது. 1055 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4212 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.95 அடியாக உள்ளது. அணைக்கு 34 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 320.15 மி.கனஅடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.04 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 16.88 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    Next Story
    ×