search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையத்தில் தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு
    X

    தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நீர் - மோர் பந்தலை திறந்து வைத்த காட்சி.

    கடையத்தில் தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தல் திறப்பு

    • கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் யூனியன் அலுவலகம் எதிரே தி.மு.க. சார்பில் நீர் - மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் அங்கப்புரத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் புதுப்பிக்க, முதல் தெருவில் 6 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கீழத்தெருவில் ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வாறுகால் அமைக்க திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    சேர்வைகாரன்பட்டி ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி ஜெய்லானி முன்னிலை வகித்தார். விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கர், ரம்யாராம்குமார், ஒன்றிய முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் எல்.எம். முருகன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஏ. செல்வராஜ், பொன்னுத்துரை, கே. செல்வராஜ், கல்யாணிபுரம் கிளைச் செயலாளர் முருகன் மற்றும் கலைச் செல்வன், நடராஜன், மணி, நவீன் கிருஷ்ணன், மணிகண்டன், மாரிச்செல்வன், ஸ்டீபன், மேசியாசிங், ஆலங்குளம் அன்பழகன், நெல்லையப்பபுரம் மணி, கண்ணன், தேன்ராஜ், உதயா, முப்புடாதி, ரேவதி, நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×