search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே வயல்வெளியில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா?  போலீசார் விசாரணை
    X

    மர்மமான முறையில் இறந்து கிடந்த அருள்.

    உளுந்தூர்பேட்டை அருகே வயல்வெளியில் பிணமாக கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தகா யங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த அருளின் உடலை மீட்டனர்.
    • உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா குனலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன் இவரை விட்டு சென்றுவிட்டார். தற்போது 2-வது மனைவி ஆரியமாலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று காலை வடமாம்பாக்கம் வயல்வெளி காட்டுப்பகுதியில் அருள் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வயல்வெளிக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இ ன்ஸ்பெக்டர் அசோகன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தகா யங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த அருளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்து இவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாமா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் அருள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×