search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
    X

    2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

    • அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கு 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறினார்.
    • நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத–ரெட்டி விடு–த்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட அரசு , தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2022-ம் ஆண்டிற்கான ஓராண்டு , ஈராண்டு தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வின் மூலம் பயிற்சியாளர்களின் சேர்க்கையினை நிரப்ப நேற்று (18-ந் தேதி) முதல் வருகிற 25-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி:- www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பக்கட்டணமாக ரூ.50,-ஐ டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு , ஜி பே, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ , மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வரு–மாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி , மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை , மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750 (வருகைக்கு ஏற்ப), சீருடை 2 செட் (தையல்கூலியுடன்), மூடு காலணி 1 செட், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை.

    விருதுநகர், அருப்புக்கோட்டை ,சாத்தூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர ஆன்லைன் மூலம் விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) , பள்ளி மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ,ஆதார் அட்டை , பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம் ஆகியவை ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு விருதுநகர்: 04562-294382, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விருதுநகர் - 04562-294755 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    2022-ம் ஆண்டில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சேர்க்கை ஆணை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×