search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு
    X

    பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு

    • அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி, தொழிலக பாதுகாப்பு துறை சித்ரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மாவட்ட நிர்வாக ஆய்வுக்குழு பொன்ராஜ் ஆகியோர் நாட்டார்மங்கலம் என்ற இடத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசு ஆலை செயல்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர்.

    அப்போது அங்கு பட்டாசு உற்பத்தி செய்வது தெரியவந்தது. மேலும் 7 மூட்டை கரி மருந்து, 5 கிலோ மணி மருந்து, 50 ஷாட் வெடி, 4 இருசக்கர வாகனம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராவணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×