என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி
    X

    ராஜபாளையம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி

    • ராஜபாளையம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள அய்யன்னாபுரத்தை சேர்ந்தவர் தங்கையா (வயது 85). ஆடு மேய்க்கும் தொ ழிலாளி. வழக்கமாக இவர் ஆடுகளை ஊருக்கு வெளிேய உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார்.

    அப்போது அங்குள்ள என்னீர் என்பவரின் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துவிட்டு வருவார். வழக்கம்போல் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற தங்கையா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி அவரது குடும்பத்தினர் வழக்கமாக மேய்ச்சலுககு செல்லும் பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அப்பேது பன்னீரின் தோட்டத்து கிணற்றில் தங்கையா பிணமாக மிதந்தார். கிணற்றில் குளிக்கும்போது வழுக்கி விழுந்து காயம் அடைந்ததில் அவர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் குருசாமி, கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×