என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண்-மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
- இளம்பெண்-மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்
விருதுநகர்
விருதுநகர் சின்னவாடியூரை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகள் சவுந்தரலட்சுமி(23). சம்பவத்தன்று ஆடு மேய்ச்சல் தொடர்பாக மகளை பெற்றோர் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சவுந்தரலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தரலட்சுமி இறந்தார். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள செங்மடை கிராமத்தை சேர்ந்தவர் அழகம்மாள்(72). இவரது மகன் ஜெயபாண்டி வௌிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயும், மகனும் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அழகம்மாள் விஷம் குடித்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மகள் நாகஜோதி கொடுத்த புகாரின்பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






