search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    பெண் விஷம் குடித்து தற்கொலை

    • பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள வடக்கு ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது55). இவரது மகன் சீனிவாசன் கோவையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    குடும்ப தேவைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திடம் சாந்தி ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுவரை ரூ.1 லட்சம் செலுத்தியிருந்த சாந்தி அதன் பின் சரியாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் நிதி நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை யில் இருந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×