search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை.

    போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த நேரம் மோட்டார் பழுதானதால் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவை களுக்கும் தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டம் முடிந்த பின் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×