search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு
    X

    இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு

    • இருசக்கர வாகனங்கள் மோதல்; மூதாட்டி சாவு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சுலோசனா(60). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசோக்நகரில் உள்ள இவரது மகள் ராமதிலகம் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    அங்கிருந்து சுலோசனாவும், ராமதிலகமும் இருசக்கர வாகனத்தில் சிவகாசி சென்றனர். ராமதிலகம் வாகனத்தை ஓட்டிவந்தார். அப்ேபாது எதிர்திசையில் வேலுசாமி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது.

    இதில் கீழே விழுந்த சுலோசனா படுகாயடைமந்தார். அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×