என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருகிற 17-ந் தேதி கடையடைப்பு போராட்டம்
- வருகிற 17-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- சாலைகளை சீரமைக்க கோரியும், திட்டப்பணிகளை துரிதமாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர்.
நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடனும், சரியான திட்டமிடுதலும் இன்றி நடந்து வருகிறது. மக்களும் இதனால் பரிதவித்து வருகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே நகரில் சாலைகளை சீரமை க்க கோரியும், திட்டப்பணிகளை துரி தமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டம் நடத்து வது என முடிவு செய்ய ப்பட்டது. இதற்கு அனைத்து வணிகர்களும், பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்