என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆதரவின்றி தவித்த மூதாட்டியை மீட்ட போலீஸ் சூப்பிரண்டு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியை போலீஸ் சூப்பிரண்டு மீட்டனர்.
- கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 80 வயதுடைய மூதாட்டி ஆதரவின்றி சுற்றி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமானது. மேலும் உணவு கிடைக்காமல் உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி ஒரே இடத்தில் கிடந்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று பார்த்து மூதாட்டியின் நிலைகுறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஆம்புலன்சு மூலம் மூதாட்டியை மீட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவருக்கு உதவியாக ஒரு பெண் போலீசையும் நியமித்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசப்பெருமாள் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் வயது மூப்பு காரணமாக மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அவரை பார்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன். ெதாடர்ந்து அவரை காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக களத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததை பொதுமக்கள் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்