search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது
    X

    ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது

    • ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் ஆலாஊரணி அண்ணாகாலனியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவர் சிவகாசி திருக்குளம் கண்மாய் ரோட்டில் வாள் மற்றும் கத்தியுடன் நின்றுகொண்டு அப்பகுதியில் வருவோரை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது திருத்தங்கலை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக நின்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×