என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி 56 வீட்டு காலனியை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மனைவி ஐஸ்வர்யா(வயது31). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அவரது தாய் சீதாலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






