என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    X

    தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    • விருதுநகர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 2022-2023ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விருதுநகர்,

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொ கை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படு த்தப் பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப் பங்கள் வரவேற்க ப்படு கின்றன.

    1.1.2022 அன்று 58 வயது நிறைவ டைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்து க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவல கத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றி யமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலைச் சான்று தமிழறிஞ ர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப் பத்துடன் இணைக்க ப்பட வேண்டும்.

    இதற்கான விண்ணப்ப படிவம் நேரிலோ, தமிழ் வளர்ச்சி துறையின் வலை தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படு பவருக்குத் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.3500-ம், மருத்துவப்படி ரூ.500-ம் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவ லகத்தில் வருகிற 31-ந்தேதிக்குள் அளிக்க வேண்டும், நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்க கத்தில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×