search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை
    X

    மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை

    • மாணவியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சொக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி நேற்று காலை அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் மாணவியை பின் தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவரது பிடியில் இருந்து அந்த மாணவி தப்பித்து வீட்டுக்கு வந்தாார். நடந்த சம்பவம் குறித்து தனது சகோரரிடம் தெரிவித்தார். உடனே அவர் அருண்பாண்டி வீட்டுக்கு சென்று கண்டித்தார். அப்போது அருண்பாண்டி, அவரது தந்தை ராஜாங்கம், சகோதரி பஞ்சு ஆகியோர் அவதூறாக பேசி மாணவியின் சகோதரரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஏ.முக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டி உள்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×