வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு

வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு
Published on

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அரசாணைப்படி தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன் விவரம் பின்வருமாறு:- சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிச்செவல் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் பிற்படுத்த–ப்பட்ட வகுப்பு பிரிவில் 1 வீடு மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் ஆதிதி–ராவிடர் பிரிவில் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடுகள், என மொத்தம் 24 வீடுகள்.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 34 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

மேற்கண்ட சமத்துவபுர வீடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்த–ப்பட்ட ஊராட்சி ஒன்றி–யத்தினை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com