search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவருக்கு அரிவாள் வெட்டு- மனைவிக்கு வலைவீச்சு
    X

    கணவருக்கு அரிவாள் வெட்டு- மனைவிக்கு வலைவீச்சு

    • கணவனை அரிவாளால் வெட்டிய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் குறிஞ்சிபட்டியை சேர்ந்தவர் ராமர்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று வீட்டை சுத்தமாக பராமரிக்கவில்லை என மனைவியை, ராமர் கண்டித்துள்ளார். இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜலட்சுமி அரிவாளால் ராமரை வெட்டினார்.

    காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலட்சுமியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் ராமர் தன்னை தாக்கியதாக ராஜலட்சுமி போலீசில் புகார் செய்துள்ளார்.

    Next Story
    ×