என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது
    X

    பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது

    • விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகள் 13-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் அரசுத்தேர்வுகள் இயக்குநர் அறிவிக்கையின்படி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு அரசுப் பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதிவரை நடைபெற உள்ளது. விருதுநகர் கல்வி மாவட்ட த்தில் 44 தேர்வுமையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான தேர்வு மையங்களும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 53 தேர்வுமையங்களும், 1 தனித்தேர்வர்களுக்கான தேர்வுமையத்திலும் தேர்வு நடைபெற உள்ளது.

    இந்த தேர்வில் வருவாய் மாவட்ட அளவில் 12-ம் வகுப்பில் 23 ஆயிரத்து 368 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 22 ஆயிரத்து 36 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் மாற்றுத்தி றனாளி மாணவர்களாக 12-ம் வகுப்பில் 105 தேர்வர்களும், 11-ம் வகுப்பில் 102 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர். இந்த தேர்வுகளில் 104 முதன்மை கண்காணிப்பா ளர்களும், 104 துறை அலுவலர்களும், 1236 அறைக்கண்கா ணிப்பா ளர்ளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சொல்வதை எழுதுப வர்களாக 110 ஆசிரியர்களும் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    அனைத்து தேர்வு மையங்களையும் கண்காணிக்க பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×