search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை
    X

    பெரியார் சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

    • பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ராஜபாளையம்

    தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை முருகேசன் தலைமையில் மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் சிவகுருநாத பாக்கியம் முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோக சேகரன், மாவட்ட பேரவை துணைத் தலைவர் திருப்பதி, பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, வர்த்தக பிரிவு வெங்கடேஷ் ராஜா, அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் ஜீவா, சிறுபான்மை பிரிவு மைதீன் என்ற ராஜப்பா, ஆந்திரா குமார், விக்னேசுவரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமர், ராமராஜா, ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ராஜபாளையம் நகர ம.தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு விருதுநகர் மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நகரசெயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், நகர அவைத்தலைவர் சேது.இன்பமணி, மாவட்ட பிரதிநிதிகள் புஷ்பவேல், ஞானசேகரன், நகரத் துணைச் செயலாளர்கள் அக்பர்அலி, லிங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ்.நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×