search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகாசி விசாக விழாவில் குழந்தைவேலன் காவடியுடன் பங்கேற்பு
    X

    காவடியுடன் சிறுவர், சிறுமிகள்.

    வைகாசி விசாக விழாவில் குழந்தைவேலன் காவடியுடன் பங்கேற்பு

    • சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
    • குழந்தைவேலன் காவடியுடன் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.

    இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் குழந்தை வேலன் காவடி எடுத்து சிறுவர்-சிறுமியர்கள் வழிபாடு செய்தனர்.மேலும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நகரில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் நடைபயணமாக சென்று வழிபாடு நடத்தினர்.

    முன்னதாக சிவகாசி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால் குடத்துடன், காவடி எடுத்து அரோகரா கோஷத்துடன் நடைபயணம் சென்ற பக்தர்கள் முருகன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், நாராயணசாமி கோவில், திருத்தங்கல் முருகன்கோவில் வரை சென்று சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடத்தினர்.

    நிகழ்ச்சியினை வழிநடத்திய ஆறுமுக சுவாமிக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×