என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தொடங்கி வைத்தார்.

    மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

    • மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

    திருச்சுழி

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலா ளராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு முதன் முறை யாக மதுரையில் முதல் மாநில மாநாடு நடைபெறு கிறது.

    இந்த மாநாட்டிற்கு தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் குடும்பத்து டன் கலந்து கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நரிக்குடியில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    விருதுநகர் கிழக்கு மாவட்டம் நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் நாலூர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மதுரை மாநில எழுச்சி மாநாடு குறித்த வாசகங்கள் அடங் கிய ஸ்டிக்கரை தங்களது இரு சக்கர வாக னங்களில் ஒட்டியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து நரிக்குடி முக்கிய சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.

    இந்த பேரணிக்கு நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.நரிக்குடி ஒன்றிய முன்னாள் சேர்மன் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தார்.

    இந்த மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கூட்டுறவு சங்க தலைவர்களான மனோகரன், பனைக்குடி ராஜா, வீரமணிகண்டன், இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் முருகன், கிளை செயலாளர்கள் உலக்குடி பாஸ்கரன், சரவணசாத்தார், சாலை இலுப்பைக்குளம் அம்மா. பிரதீப், வீரபத்திரன், ஒட்டங்குளம் வெள்ளத் துரை, மலைராஜ், கணேசன், பெரியசாமி, தூதை முனிய சாமி, சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×