என் மலர்
உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
- இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிவரும் பிரவீன் குமார், சிவா தினேஷ், விக்னேஷ் பாபு, சிவராம் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்.பி.ஏ. மாணவர்களுக்கான தொழில் வாய்ப்புகள், நிதி சேவை, மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த முத்தமிழ், சகிலா ஆகியோர் ஆங்கில மொழி குறித்து விளக்கினர். டாக்டர் ராஜேஸ்வரி மேலாண்மை குறித்து பேசினார். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story






