மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா

ராஜபாளையம் அருகே மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது.
மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின் முறை மகிமை பண்டுக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

முன்னதாக அம்மனுக்கு பால் பன்னீர் தேன் இளநீர் போன்ற 16-வகை அபி ஷேகங்கள் நடத்தப்பட்டு தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 3 மணி அளவில் கொடி யேற்று விழா சிறப்பாக நடை பெற்றது. ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

முதல்நாள் விழாவில் இன்று மாலையில் அம்மன் குடை சப்பரத்தில் எழுந் தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு இன்னிசை கச்சேரி நடை பெற்றது. 9-ம் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் வீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com