search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: 4 பேர் மீது வழக்கு
    X

    போலி ஆவணம் தயாரித்து நில மோசடி: 4 பேர் மீது வழக்கு

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் தாசில்தார் உள்பட 4 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
    • கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 334. 75 சதுர மீட்டர் நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை சூலக்கரையை சேர்ந்த நாராயணன், சின்னமுத்து, அருப்புக்கோட்டை மண்டல முன்னாள் துணை தாசில்தார் ரவிச்சந்திரன், சூலக்கரை முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி கணபதி சுப்புராம் ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கதிர்வேல் இது தொடர்பாக விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நில மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சூலக்கரை போலீசார் ஓய்வு பெற்ற துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×