search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    X

    பொதுக்கூட்டத்தில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., திண்டுக்கல் லியோனி மற்றும் பலர் பங்கேற்றனர்.

    7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்பு

    • 7-வது நிகழ்ச்சியாக நடந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம், மார்ச் 6-

    ராஜபாளையம் தொகுதி தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் லியோனி தலைமையில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி. முன்னிலையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் செட்டியார்பட்டி கலை யரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்கு சாட்சி ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி தான். தொடர்ந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றார்.

    திண்டுக்கல் லியோனி பேசுகையில், பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியது தி.மு.க. தான். பெண்கள் முன்னேற்றத்திற்காக கட்டணமில்லா பஸ் வசதி, புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அதிகளவில் பெண் மேயர்களை உரு வாக்கிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி ஆகும் என்றார்.

    கூட்டத்தில் நகர செயலா ளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், பேரூர் செயலாளர்கள் இளங்கோவன், சிங்கப்புலி அண்ணாவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாணவரணி அமைப்பா ளர் வேல்முருகன், துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேல், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×